சர்ச்சைக்குரிய இணையவழி விசா மோசடி : பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Date:

வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு இணையவழி விசா வழங்குவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனவும் மற்றும் அது சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும்  தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

குறித்த மனுவை பாட்டலி சம்பிக்க ரணவக்க  மற்றும் எம்.ஏ.சுமந்திரன்  ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.

இதனடிப்படையில், இந்த மனுவில் பிரதிவாதிகளுக்கு ஒகஸ்ட் இரண்டாம் திகதி நீதிமன்றம் மனுஅனுப்பியுள்ளதுடன் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர் தலைமையிலான அமைச்சரவை குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு நிறுவனத்திற்கு இணையவழி விசா வழங்குவதில் நேரடியாக தலையிட்ட அமைச்சர்களுக்கு தனித்தனியாக அழைப்பாணைகள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் ஏனைய அமைச்சர்கள் சார்பில் அமைச்சரவை செயலாளருக்கு அழைப்பாணைகள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...