ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பாக வெளியான அறிவிப்பு

Date:

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது தேர்தலுக்கான திகதி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி நாளை (26) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.

நாளை ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டால், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் செயல்பாடு எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் அல்லது 28ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...