தணிக்கை சபை உறுப்பினராக அல்ஹாஜ் ஹில்மி முஹம்மத் நியமனம்

Date:

இலங்கை ஜனநாயகக் குடியரசின் தணிக்கை சபை உறுப்பினராக ‘மாத்ய கீர்த்தி’ அல்ஹாஜ் ஹில்மி முஹம்மத் Hilmy Mohamed அவர்கள் நியமனம் பெற்றுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக ஊடகத்துறைப் பட்டதாரியான இவர், இலங்கை நிர்வாக சேவை உறுப்பினராக இருந்து பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தவராவார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சு, துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சு, நீர் வளங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சு, அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் கலாசார அமைச்சு முதலான நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

மள்வானையைச் சேர்ந்த மர்ஹூம்களான ஹில்மி மத்திச்சம், அஸ்மா உம்மா தம்பதியினரின் புதல்வரான இவர் மல்வானை அல் முபாரக் மற்றும் கம்பளை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவராவார்.

லண்டன், மலேசியா, இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு முதலான நாடுகளில் ஊடகத்துறை தொடர்பான பயிற்சிகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...