தேசபந்து தென்னகோன் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சட்ட அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தமது பதிலை அறிவிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவியில் கடமையாற்றுவதற்கும் செயற்படுவதற்கும் உயர் நீதிமன்றம் இன்று (24) இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டே உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால உத்தரவில் ​​பொலிஸ்மா அதிபர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்குமாறும் உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

ஐஜிபி தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பான சட்டச் சிக்கல்கள் குறித்து ஆழமாக ஆய்வு செய்ய போதிய கால அவகாசம் தேவை என்று அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.

அதன்படி, அமைச்சரவையின் பதிலை இன்னும் இரண்டு நாட்களில் அறிவிப்பதே மிகவும் பொருத்தமானது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...