நாடாளுமன்றிற்கு எடுத்துச் செல்லப்படும் சம்பந்தனின் பூதவுடல்!

Date:

மறைந்த  ஆர். சம்பந்தனின் பூதவுடல் எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்துக்கு அஞ்சலிக்காக வைக்கப்படும் என நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 2.00மணிமுதல் மாலை 04.00மணிவரை பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனைத்து பணிப்புரைகளையும் பிரதமர் தினேஷ் குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

அன்னாரது பூதவுடல் பொரள்ளையிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் மக்கள் அஞ்சலிக்காக நாளை(02) வைக்கப்படவுள்ளது.

 

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...