புதுப்பொழிவுடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட ‘Amazon College & Campus’ சந்தைப்படுத்தல் காட்சியறை!

Date:

சுமார் 15 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகாரங்களைக் கொண்ட கல்வி நிறுவனமாக இயங்கி வரும் Amazon College & Campus பம்பலப்பிட்டி தலைமைக் காரியாலயத்தில் புதிய மாடியில் சந்தைப்படுத்தல் பிரிவினை புதுப்பொழிவுடன் ஆரம்பித்துள்ளது.

இந் நிகழ்வு கடந்த 27ம் திகதி காலை 9.30 மணிக்கு அதன் நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தலைமையில், உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் பிரதம அதிதியாக ஐக்கிய அமெரிக்காவின் பேராசிரியர் கேரி கெல்ஸ்டோன் மற்றும் விசேட அதிதிகளாக கல்வி அமைச்சின் தமிழ் பிரிவு பணிப்பாளர் ஜே.சேதுரத்னம் அவர்களும் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரி  அபேரத்ன அவர்களும், இலங்கை தேசிய கராத்தே சம்மேளனத்தின் தலைவர் அந்தோ தினேஷ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த புதிய சேவையின் மூலமாக இலங்கை வாழ் மாணவர்களுக்கும் பல பாடநெறிகள் இலகுவாக கற்கக் கூடிய சேவையும் மேலும் நவீன கற்றல் முறைகளும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Diploma முதல் HND, Degree, Master, PhD, பாடநெறிகளான Psychology, Teacher Training, Business Management, Caregiver, Childcare Center Operator, English, IELTS, IT ஆகிய துறைகளில் மாணவர்களுக்கு கற்பதற்குபல புலமைப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாக நிறைவேற்று பணிப்பாளர் திரு.  இல்ஹாம் மரிக்கார் தெரிவித்தார்.

மேலும் Amazon College ஆனது கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் TVEC (மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு) இல் பதியப்பட்ட நிறுவனமாகும்.

மேலதிக விபரங்களுக்கு:
0765 204 605
www.amazoncollege.lk

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...