ஹமீத் அல் ஹூசைனியா பாடசாலையின் பழைய மாணவத் தலைவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

Date:

கொழும்பு -12 ஹமீத் அல் ஹூசைனியா பாடசாலையின் பழைய மாணவத் தலைவர்களின் ஏற்பாட்டில் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜுலை 14ஆம் திகதி 2024 சாலிக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டித் தொடர் தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பு மற்றும் பங்குபற்றும் அணிகளின் சீறுடை (jersey) அறிமுக நிகழ்வு மிக விமர்சையாக நேற்றைய தினம் வெல்லம்பிட்டியில் உள்ள பிரபல ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஸ்ட சட்டத்தரணி  முனீர் தௌபிக் மற்றும் சிறப்பு அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம் மரைக்கார் கலந்துகொண்டனர்,

மேலும், அதிதிகளாக பாடசாலையின் அதிபர் எம்.ஆர்.எம். ரிஸ்கி , பாடசலையின் மாணத்தலைவர்களுக்கான பொறுப்பு ஆசிரியை திருமதி ஓ.எஸ்.எப். ஸாமா, பழைய மாணவர்கள் சங்கக்குழுவின் செயலாளர் இம்தியாஸ் இல்யாஸ், பாடசலை அபிவிருத்தி சங்க குழுவின் செயலாளர் சப்ராஸ் பைஸால், பழைய மாணவர் சங்க குழுவின் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் எம்.சீ.எம். அஜ்வத் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஒழுக்காற்று குழு பொறுப்பாளர் ஏ. ஆர். எம். இம்தியாஸ், பழைய மாணவ தலைவர் சங்கத்தின் தலைவர் அஹ்லான் அமானி மற்றும் இப்போட்டி தொடர் ஏற்பாட்டின் தலைவர் கியூ.எம்.எம் ஹிராஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் போட்டித்தொடரில் பங்கு கொள்ளும் அணிகளின் தலைவர்கள், பாடசாலையின் மாணவத்தலைவர்கள் மற்றும் இப்போட்டி தொடருக்கான அனுசரணையாளர்களும் கலந்துகொண்டனர்.

இப்போட்டித் தொடரில் வெற்றி கொள்ளும் அணிக்கான கிண்ணம் மற்றும் விளையாட்டு சீறுடைகள் பிரதம அதிதிகளால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

மேலும், அனுசரணையாளர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...