ஈரானுக்கான அனைத்து விமானங்களையும் இடைநிறுத்திய துருக்கி!

Date:

துருக்கிய ஏர்லைன்ஸ், (Turkish Airlines) ஈரானுக்கான அனைத்து விமானங்களையும் இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பானது, நேற்றையதினம் (02) வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஈரானில் பல இடங்களுக்கு திட்டமிடப்பட்ட விமான சேவைகள் இன்று (03) சனிக்கிழமை வழமைக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கும்  ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல் ஒன்று நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...