“உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்”: ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரககத்தின் புதிய வேலைத்திட்டம்

Date:

இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து சவூதி அரேபியாவில் வாழ்கின்ற சகல பிரஜைகளும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவருடன் நேரடியாகப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கில் ரியாதில் உள்ள இலங்கை தூதரகம் “உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்” என்ற பெயரில் சமூகத்தை நோக்கிய ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து சவூதி அரேபியாவில் வாழ்கின்ற சகல பிரஜைகளும் தமது பிரச்சினைகளை முன்வைத்து தூதுவருடன் கலந்துரையாடுவதற்கும், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவரை நேரடியாகத் தொடர்பு கொண்டு தமது ஆலோசனைகளை முன்வைப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.

இந்த சந்திப்பு இரு வாரங்களுக்கு ஒரு முறை வியாழக்கிழமை தினங்களில் மு.ப. 9.30 – பி.ப. 1.30 வரை இடம்பெறும்.

ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்தப் புதிய முன்னெடுப்பினை இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் கட்டியெழுப்பப்பட்டு 50 ஆண்டு பூரணமாவதைக் கொண்டாடுவதுடன் அறிமுகப்படுத்துகிறது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கான சம்பிரதாயபூர்வமான ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 15.08.2024 அன்று வியாழக்கிழமை மு.ப. 9.30 பி.ப. 1.30 வரை இடம்பெறும்.

இந்த சந்திப்பில் பின்வரும் தொலைபேசி/ வாட்ஸ்அப் (WhatsApp)/ ஐ.எம்.ஓ. (IMO) ஆகிய இலக்கங்களின் ஊடாக கலந்து கொள்ள முடியும்: +966 56 174 4748

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...