“உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்”: ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரககத்தின் புதிய வேலைத்திட்டம்

Date:

இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து சவூதி அரேபியாவில் வாழ்கின்ற சகல பிரஜைகளும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவருடன் நேரடியாகப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கில் ரியாதில் உள்ள இலங்கை தூதரகம் “உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்” என்ற பெயரில் சமூகத்தை நோக்கிய ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து சவூதி அரேபியாவில் வாழ்கின்ற சகல பிரஜைகளும் தமது பிரச்சினைகளை முன்வைத்து தூதுவருடன் கலந்துரையாடுவதற்கும், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவரை நேரடியாகத் தொடர்பு கொண்டு தமது ஆலோசனைகளை முன்வைப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.

இந்த சந்திப்பு இரு வாரங்களுக்கு ஒரு முறை வியாழக்கிழமை தினங்களில் மு.ப. 9.30 – பி.ப. 1.30 வரை இடம்பெறும்.

ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்தப் புதிய முன்னெடுப்பினை இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் கட்டியெழுப்பப்பட்டு 50 ஆண்டு பூரணமாவதைக் கொண்டாடுவதுடன் அறிமுகப்படுத்துகிறது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கான சம்பிரதாயபூர்வமான ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 15.08.2024 அன்று வியாழக்கிழமை மு.ப. 9.30 பி.ப. 1.30 வரை இடம்பெறும்.

இந்த சந்திப்பில் பின்வரும் தொலைபேசி/ வாட்ஸ்அப் (WhatsApp)/ ஐ.எம்.ஓ. (IMO) ஆகிய இலக்கங்களின் ஊடாக கலந்து கொள்ள முடியும்: +966 56 174 4748

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...