உறவுகளை பலப்படுத்துவதற்காக அமைச்சர் அலி சப்ரி எகிப்து விஜயம்

Date:

 வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி  மூன்று நாள் பயணமாக எகிப்துக்கு  விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று 07ஆம் திகதி முதல் 09 ஆம் திகதிவரை அமைச்சர் அலி சப்ரி எகிப்தில் தங்கியிருப்பார்.

இப்பயணத்தின் போது, கெய்ரோவில் உள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், எகிப்தின் முதலீடு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சரையும் சந்திக்கவுள்ளார்.

அமைச்சர் அலி சப்ரி இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் எகிப்திய வர்த்தக சம்மேளன கூட்டமைப்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன் பல முக்கியஸ்தர்களையும் சந்திக்கவுள்ளார்.

இந்த இருதரப்பு பயணமானது இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

AI தொழிநுட்பத்தால் சிறுவர்களுக்கு ஆபத்து: இலங்கை பொலிஸார் தீவிர எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக...

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி...

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து...