உள்ளூராட்சி மன்றத் தேர்தல்:சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமையின் ஊடாக அதற்காக முன்வைக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற தெரிவித்துள்ளார்.

அந்த வேட்புமனுக்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டால் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு வாக்களிக்க முடியாது போகுமென இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற தெரிவித்தார்.

அதேபோன்று 18 வயது பூர்த்தியடைந்த மேலும் சிலர் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...