உள்ளூராட்சி மன்றத் தேர்தல்:சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமையின் ஊடாக அதற்காக முன்வைக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற தெரிவித்துள்ளார்.

அந்த வேட்புமனுக்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டால் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு வாக்களிக்க முடியாது போகுமென இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற தெரிவித்தார்.

அதேபோன்று 18 வயது பூர்த்தியடைந்த மேலும் சிலர் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...