பேருவளையில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு அறிமுக நிகழ்ச்சி!

Date:

‘The ABCs of AI: Shaping Your Future’ என்ற தொனிப்பொருளில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான ஒரு அறிமுக நிகழ்ச்சி பேருவளையில் நடைபெற்றது.

பேருவளை வலய ராபிததுந் நளீமீய்யீன் அமைப்பின் அங்கத்தவர்களுக்கான மேற்படி நிகழ்ச்சி 24 ஆம் திகதி பேருவளை விஸ்டம் கெம்பஸில் இடம்பெற்றது.

காலை 9.30 முதல் நண்பகல் 12.30 வரை நடைபெற்ற மேற்படி நிகழ்வில் 24 அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

வளவாளராக SLBC முஸ்லிம் சேவைத் தயாரிப்பாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான அஷ்ஷெய்க் இஸ்பஹான் சாப்தீன் கலந்து கொண்டார்.

சிறப்பான முறையில் அமையப் பெற்ற மேற்படி நிகழ்வில் AI பற்றிய அறிமுகம் உட்பட அதன் கையாளுகை முறைமைகளும் நடைமுறை ரீதியாக பயிற்றுவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணிக்கக் கல் வியாபாரிகள் என கலந்து கொண்டதோடு, விஸ்டம் கெம்பஸ் உரிமையாளர் அஷ்ஷெய்க் பவ்ஸர், நிகழ்வை ஏற்பாடு செய்த அஷ்ஷெய்க் இஸ்பஹான் பாகிர் உட்பட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...