தேர்தல் பிரசார காலங்களில் கட்டவுட், பதாகைகளை அகற்ற 1,500 பணியாளர்கள் நியமனம்

Date:

தேர்தல் பிரசார காலங்களின் போது பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை விளம்பரப்படுத்த பயன்படுத்தும் கட்டவுட்கள், போஸ்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அலங்காரங்களை அகற்றுவதற்காக பொலிஸ் திணைக்களத்துக்கு சுமார் 1,500 பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

அதன்படி நாடு முழுவதுமுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு நான்கு பணியாளர்கள், ஏ-1 கிரேடு பொலிஸ் நிலையத்துக்கு மூன்று பணியாளர்கள், ஏ-2 கிரேடு பொலிஸ் நிலையத்துக்கு மூன்று பணியாளர்கள், மற்ற பொலிஸ் நிலையங்களுக்கு இரண்டு பணியாளர்கள் என தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு தினசரி ஊதியத்தை வழங்கும்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...