தேர்தல் பிரசார காலங்களில் கட்டவுட், பதாகைகளை அகற்ற 1,500 பணியாளர்கள் நியமனம்

Date:

தேர்தல் பிரசார காலங்களின் போது பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை விளம்பரப்படுத்த பயன்படுத்தும் கட்டவுட்கள், போஸ்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அலங்காரங்களை அகற்றுவதற்காக பொலிஸ் திணைக்களத்துக்கு சுமார் 1,500 பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

அதன்படி நாடு முழுவதுமுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு நான்கு பணியாளர்கள், ஏ-1 கிரேடு பொலிஸ் நிலையத்துக்கு மூன்று பணியாளர்கள், ஏ-2 கிரேடு பொலிஸ் நிலையத்துக்கு மூன்று பணியாளர்கள், மற்ற பொலிஸ் நிலையங்களுக்கு இரண்டு பணியாளர்கள் என தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு தினசரி ஊதியத்தை வழங்கும்.

Popular

More like this
Related

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...