பெண்ணுக்கு 18 ஆணுக்கு 21 திருமண வயதை நிர்ணயித்து அசாம் மாநிலத்தில் மசோதா தாக்கல்!

Date:

அசாம் மாநில சட்டமன்றத்தில் முஸ்லிம் விவாக, விவாகரத்து தகவல்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கான சட்டமூலமொன்றை ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான ஆளுங்கட்சி தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக முஸ்லிம்கள் தமது சமயத்தலைவர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்வார்கள். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் முஸ்லிம்கள் விவாகம் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும்.

இந்தச் சட்டத்தின் படி பெண்ணின் திருமண வயது 18ஆகவும் ஆணின் திருமண வயது 21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிறுவர் திருமணம் தடுக்கப்படும் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டமே அனைவருக்குமான சட்டமாக்கப்பட்டது.தற்போது அசாம் மாநிலம் இதனை நடைமுறைப்படுத்தவிருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் வகையில் தேர்தல் வருடத்தில் வாக்காளர்களை பிளவுபடுத்துவதற்காக அந்தச்சட்டம் கொண்டு வரப்படுகின்றது என எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...