பெண்ணுக்கு 18 ஆணுக்கு 21 திருமண வயதை நிர்ணயித்து அசாம் மாநிலத்தில் மசோதா தாக்கல்!

Date:

அசாம் மாநில சட்டமன்றத்தில் முஸ்லிம் விவாக, விவாகரத்து தகவல்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கான சட்டமூலமொன்றை ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான ஆளுங்கட்சி தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக முஸ்லிம்கள் தமது சமயத்தலைவர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்வார்கள். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் முஸ்லிம்கள் விவாகம் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும்.

இந்தச் சட்டத்தின் படி பெண்ணின் திருமண வயது 18ஆகவும் ஆணின் திருமண வயது 21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிறுவர் திருமணம் தடுக்கப்படும் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டமே அனைவருக்குமான சட்டமாக்கப்பட்டது.தற்போது அசாம் மாநிலம் இதனை நடைமுறைப்படுத்தவிருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் வகையில் தேர்தல் வருடத்தில் வாக்காளர்களை பிளவுபடுத்துவதற்காக அந்தச்சட்டம் கொண்டு வரப்படுகின்றது என எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...