முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட அந்தஸ்திலிருந்து ஹரீஸ் எம்.பி. நீக்கம்: கட்சியின் செயலாளர் கடிதம்

Date:

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறியதற்கான சரியான காரணத்தை விளக்குமாறு கோரி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பரால் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

குறித்த கடிதத்தின் படி, முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட அந்தஸ்திலிருந்து ஹரீஸ் எம்.பி உடனடியாக நீக்கப்படுவதாகவும்,  மேலதிகமாக பிரதித் தலைவர் பதவியிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தன்னிலை விளக்கமளிப்பதற்காக அவருக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்துவது தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட ஆலோசனைக் கூட்டங்களில் ஹரீஸ் கலந்து கொள்ளவில்லை என்பதும் அவர் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து ஹரீஸை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக நேற்றையதினம் ஓட்டமாவடியில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்திருந்தார்.

 

 

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...