வாக்குச்சீட்டு ஆவணங்களை தபால் நிலையத்திற்கு வழங்க நடவடிக்கை

Date:

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் வாக்குச்சீட்டு ஆவணங்கள் நாளை மறுதினம் (26) தபால் நிலையத்திற்கு வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் வாக்குச்சீட்டு ஆவணங்களை அச்சிடும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பை அடுத்த மாதம் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரசாங்க ஊழியர்கள் அடுத்த மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்களில் வாக்களிக்கப்பதற்கும் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த வருடம், 712,319 அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதிப்பெற்றுள்ளனர்.

இதேவேளை, தமது திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள தபால் மூல வாக்குச் சீட்டுகளை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...