வேட்பாளர்கள் 21 நாட்களுக்குள் பிரச்சார செலவுகள் குறித்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும்!

Date:

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் பிரச்சார செலவுகள் குறித்த முழுமையான அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டாலும் பதவியை இழக்க நேரிடும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க தேர்தல் செலவினச் சட்டம் பிரச்சாரச் செலவினங்களுக்கான சட்ட வரம்புகளை அமைக்கிறது என ஆணையாளர் நாயகம் ஊடக அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.

இந்த வரம்புகளை மீறுவது சட்டவிரோதமானது என்பதுடன் சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும். தேர்தல் செலவுக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ், அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகமாகச் செலவு செய்ய அனுமதிக்கப்படமாட்டாது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அறிக்கை 10 நாட்களுக்கு பொதுவெளியில் காட்டப்படும். வேட்பாளர் ஒருவர் அதிகமாகச் செலவு செய்வது கண்டறியப்பட்டால், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அவர்களது அலுவலகத்தை ரத்து செய்ய முடியும்” என்று சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...