ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலைக்கு சஜித் கண்டனம்

Date:

ஹமாஸ் அமைப்பின் தலைவர்  இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹமாஸ்  அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இது ஒரு மனிதாபிமானமற்ற தாக்குதல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதுடன் மத்திய கிழக்கு  பிராந்தியத்தின் அமைதிக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் மறைமுக விளைவை எதிர்காலத்தில் எமது நாடும் அனுபவிக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...