ஹமாஸ் தலைவர் தங்கியிருந்த விடுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பே குண்டு பொருத்தப்பட்டது!

Date:

ஈரான் ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தெஹ்ரான் வந்திருந்த நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹினியா தங்கியிருந்த விடுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பே குண்டு பொருத்தப்பட்டுள்ளதாகவும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாகவும் அமெரிக்கவிலிருந்து வெளியாகின்ற ‘த நியூயோர்க் டைம்ஸ்’ நேற்று (01) செய்தி வெளியிட்டுள்ளது.

5 மத்தியக் கிழக்கு அதிகாரிகளையும் ஒரு அமெரிக்க அதிகாரியையும் மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர படைகளே (IRGC) விடுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெஹ்ரானுக்கு விஜயம் செய்த பல சந்தர்ப்பங்களிலும் ஹனியாவுக்கு இந்த விடுதியையே தங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது. புதனன்று இவரது மெய்ப்பாதுகாவலரும் இங்கு தங்கியிருந்த வேளையிலேயே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டு தாக்குதலுக்கு இஸ்ரேல் இதுவரை பொறுப்புக்கூறவோ மறுக்கவோ இல்லை, ஆனாலும் ஈரானிய ஆன்மிகத் தலைவர் அலி கொமைனி இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என கூறியுள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...