அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

Date:

இலங்கையில் அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை சமூக பாதுகாப்பு சபை (Sri Lanka Social Security Board) ஆரம்பித்துள்ளது.

இதேவேளை ஒருவர் தமது சபையில் அங்கத்தவரானதன் பின்னர் அவருக்கான ஓய்வூதியம் தயாரிக்கப்படும் என அந்த சபையின் பொது முகாமையாளர் கே.ஏ.எஸ்.பிரசன்ன களுஆரச்சி (K.S. Prasanna Kalu Arachchi) தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் காலங்களில் அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களை 011-2886 088 அல்லது 076-095-4002 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சமூக பாதுகாப்பு சபையின் பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை அரச ஓய்வூதியம் பெறுபவர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...