அஷ்ஷெய்க் முனீர் முழபரின் நிதிப் பங்களிப்பில் மினுவாங்கொடை அல் அமானுக்கு அறிவியல் ஆய்வகம்

Date:

மினுவாங்கொடை கல்லொழுவை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று மிக முக்கியமான நிகழ்வாக, நவீன அறிவியல் ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம அதிதியாக, சமூக செயற்பாட்டாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான மௌலவி முனீர் முழபர் கலந்து சிறப்பித்தார்.

இவர் தமது உரையில், “இந்த அறிவியல் ஆய்வகம், மாணவர்களின் அறிவியல் திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை வழங்கும் ஒரு முக்கியமிக்க சாதனையாக இருக்கும். இத்தகைய வசதிகள் மாணவர்களின் படிப்புத் திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்,” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த அறிவியல் ஆய்வகத்தை உருவாக்குவதற்கான நிதி உதவியையும் அவர் வழங்கியிருந்தமை சிறப்பம்சமாகும்.

நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக, மினுவாங்கொடை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி பணிப்பாளர் வாஜிர ரணராஜ பெரேரா, உதவி கல்வி பணிப்பாளர் ஏ.ஏ.எம். ரிஸ்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாடசாலை அதிபர், உப அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பிற நிர்வாக குழுவினரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDS), பழைய மாணவர்கள் சங்கம் (OBA & OGA) மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆய்வகம், பாடசாலை மாணவர்களுக்கு அறிவியல் துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமையும் என அனைவராலும் பாராட்டப்பட்டது.

 – ஏ.சி பௌசுல் அலிம்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...