இலங்கையின் முதலாவது இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையம் ‘சொபாதனவி’ திறந்து வைப்பு

Date:

இலங்கையில் 1977 ஆம் ஆண்டு அரசாங்கம் ஆடைத் கைத்தொழிலை நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்றியது போன்று, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை அடுத்த தசாப்தத்தில் நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதன்படி, இலங்கையை தன்னிறைவான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியாளராக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், மேலதிகமான வலுசக்திக்கான கேள்வி எப்போதும் இருக்கும் என்பதோடு, உத்தேச இந்தியா – சிங்கப்பூர் மின் இணைப்பு நடைமுறைக்கு வந்தால், அதில் இணைந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் முதலாவது இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையமான கெரவலப்பிட்டிய ‘சொபாதனவி’ ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்தின் முதல் கட்டத்தை இன்று (28) காலை திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் தெரிவித்தார்.

இலங்கையின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்காக நாட்டின் மின்சார விநியோகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் முக்கியமான உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டமான ‘லக்தனவி’ நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட “சொபாதனவி” மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்பிற்கு 350 மெகாவோட் மின்சாரத்தை பெற்றுத்தரும்.

முதல் கட்டமாக, 220 மெகாவாட் வலுவை கொண்ட F-Class gas turbines இயக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதனால் நாட்டின் தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சார உற்பத்தி மூலத்துக்கு தேவையான பங்களிப்பு வழங்கப்படும். இரண்டாம் கட்டம், 2025 ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் நிறைவு செய்யப்படவுள்ளது. நீராவி சுழற்சி விசையாழி ஒன்றை நிறுவுவதன் மூலம் உற்பத்தி நிலையத்திலிருந்து மேலும் 130 மெகாவோட் மின் உற்பத்தியை பெற்றுக்கொள்ள முடியும்.
‘சொபாதனவி’ மின் உற்பத்தி நிலையம் இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெரும் பங்களிப்புச் செய்யும். அதன்படி, இந்த மின் உற்பத்தி நிலையம் நாட்டு மக்களுக்கு நிலையான மற்றும் குறைந்த விலையில் வலுசக்தி விநியோகத்தை வழங்குவதோடு, தொழிற்சாலை வளர்ச்சி, வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் உதவும்.

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...