இஸ்ரேலில் 48 மணி நேர அவசர நிலை பிரகடனம்: பாரியளவிலான தாக்குதல்களை மேற்கொள்ளும் ஹிஸ்புல்லா: மத்திய கிழக்கில் பதற்றம்

Date:

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை, இஸ்ரேல் சமீபத்தில் கொன்றதை தொடர்ந்து, இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் தீவிரம் அடைந்திருக்கிறது. இதனையடுத்து தன் நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவின் பெரியளவிலான தாக்குதல்களை அறிந்த இஸ்ரேல் லெபனானில் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேல் இன்று அறிவித்தது.

காசாவில் ஹமாஸுடன் ஏற்கனவே போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் ஹிஸ்புல்லாவால் ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant நாடு முழுவதும் 48 மணி நேர அவசர நிலையை அறிவித்தார்.

லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா, கடந்த மாதம் அதன் தளபதி ஃபுவாட் ஷுக்ரைக் கொலை செய்தமைக்கு ஆரம்ப பதிலடியாக இஸ்ரேலை நோக்கி பாரியளவிலான ட்ரோன்களை ஏவியது.

அமெரிக்கா+எகிப்து+அரபு நாடுகள் சேர்ந்து போர் நிறுத்தம் குறித்து, இஸ்ரேலிடமும், ஹமாஸிடமும் பேசி வந்தது. இந்த பேச்சுவார்த்தை அப்படி, இப்படி போய் ஒரு கட்டத்தில் சமாதானத்திற்கு நெருக்கமாக வந்தது. இந்த நேரத்தில்தான்,   இஸ்ரேல் ராணுவம், ஹிஸ்புல்லாவின் தளபதியை போட்டு தள்ளியது. இதுதான் இப்போதையை பதற்றத்திற்கு காரணம்.

போரில் இதுவரை 40,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

Popular

More like this
Related

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க நடவடிக்கை!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்...

‘காஷ்மீர் கறுப்பு தினம்’: கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாட்டில் (27) ‘காஷ்மீர் கறுப்பு தினத்தை’ குறிக்கும்...

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் 30ஆம் திகதி ஆரம்பம்

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (30) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள்...

4 ஆண்டுகளுக்குப் பிறகு குவைத் ஏர்வேஸ் கொழும்புக்கு!

குவைத் ஏர்வேஸ் 4 வருட இடைவெளிக்குப் பிறகு இன்று (27) முதல்...