ஈரான் துணை ஜனாதிபதி பதவி விலகல்: அந்நாட்டு அரசியலில் பரபரப்பு!

Date:

ஈரான் துணை ஜனாதிபதி ஜாவித் ஜப்ரி திடீரென பதவியிலிருந்து விலகியுள்ளமையானது, அந்நாட்டு அரசியலில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

கடந்த ஜூன் 15ஆம் திகதி உலகுவானூர்தி விபத்தில் ஈரானின் ஜனாதிபதி இருந்த இப்ராகிம் ரெய்சி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, ஜனாதிபதி பதவிக்கு கடந்த ஜூன் 28,மற்றும் ஜூலை 05 ஆகிய திகதிகளில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

மொத்தமுள்ள 2.45 கோடி ஓட்டுகளில், 50 சதவீத ஓட்டுக்கள் பெற்று ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையுடன் ஈரான் ஜனாதிபதியாக மசூத் பெசஷ்கியான் பதவியேற்றார். அவருடன் துணை ஜனாதிபதியாக ம ஜாவித் ஜப்ரி பதவியேற்றார்.

இந்நிலையில் இன்று துணை ஜனாதிபதி ஜாவித் ஜப்ரி திடீரென பதவிவிலகுவதாக தன் ‛எக்ஸ்‛ வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் முன்மொழிந்த 19 உறுப்பினர்களை கொண்ட புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பாக அதிருப்தி அடைந்து, பதவி விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் வேறு பல காரணங்களால் அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

 

Popular

More like this
Related

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...

‘இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில் அதன் நடைமுறையும்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH இல்.

மிஷ்காத் ஆய்வு நிறுவனம் வெளியிடுகின்ற ''இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில்...

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...