“உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்”: ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரககத்தின் புதிய வேலைத்திட்டம்

Date:

இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து சவூதி அரேபியாவில் வாழ்கின்ற சகல பிரஜைகளும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவருடன் நேரடியாகப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கில் ரியாதில் உள்ள இலங்கை தூதரகம் “உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்” என்ற பெயரில் சமூகத்தை நோக்கிய ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து சவூதி அரேபியாவில் வாழ்கின்ற சகல பிரஜைகளும் தமது பிரச்சினைகளை முன்வைத்து தூதுவருடன் கலந்துரையாடுவதற்கும், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவரை நேரடியாகத் தொடர்பு கொண்டு தமது ஆலோசனைகளை முன்வைப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.

இந்த சந்திப்பு இரு வாரங்களுக்கு ஒரு முறை வியாழக்கிழமை தினங்களில் மு.ப. 9.30 – பி.ப. 1.30 வரை இடம்பெறும்.

ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்தப் புதிய முன்னெடுப்பினை இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் கட்டியெழுப்பப்பட்டு 50 ஆண்டு பூரணமாவதைக் கொண்டாடுவதுடன் அறிமுகப்படுத்துகிறது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கான சம்பிரதாயபூர்வமான ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 15.08.2024 அன்று வியாழக்கிழமை மு.ப. 9.30 பி.ப. 1.30 வரை இடம்பெறும்.

இந்த சந்திப்பில் பின்வரும் தொலைபேசி/ வாட்ஸ்அப் (WhatsApp)/ ஐ.எம்.ஓ. (IMO) ஆகிய இலக்கங்களின் ஊடாக கலந்து கொள்ள முடியும்: +966 56 174 4748

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...

2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகளின் வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒன்லைன் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ஒன்லைன் விளம்பரங்களில் ஈடுபடும்போது மக்கள் எச்சரிக்கையாக...

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல...