ஊடகவியலாளர்களுக்கான விசேட திட்டம் : ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

Date:

எதிர்வரும் புதிய நாடாளுமன்றத்தின் கீழ் உள்ளூர் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு ஊடக ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கும் அவர்களின் சேவை ஒப்பந்தங்கள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நாடு தழுவிய ஊடகவியலாளர்கள் அமைப்பின் உள்ளூர் ஊடகவியலாளர்களை பாராட்டி கருத்து தெரிவிக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய பிரேரணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்தநிலையில், நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பொறுப்பான கட்சிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் அமைப்பு நாட்டில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேர்தலை ஒத்திவைக்க தாம் ஒரு போதும் விரும்பவில்லை எனவும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பு தமக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...

வியட்நாம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் செங்கம்பள வரவேற்பு

இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான...