கல்லொழுவை கடை தெருவில் தீ விபத்து: விசாரணைகள் முன்னெடுப்பு

Date:

மினுவாங்கொடை கல்லொழுவை  பகுதியில்  நேற்று (11) வெடிப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட கடை ஒன்றில் தீ விபத்து  ஏற்பட்டது.

தீ விபத்து தொடர்பில் தகவல் அறிந்தவுடன், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இவ்விபத்து விபத்து தானாக ஏற்பட்டதா அல்லது மின்சார கோளாறால் ஏற்பட்டதா என்பது தொடர்பில் இதுவரை உறுதியாக தெரியவில்லை.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் சாம்பலாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் வர்த்தகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

(ஏ.சி பௌசுல் அலிம்)

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...