காசா மீது வான் தாக்குதல் 50 பேர் பலி

Date:

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல் – மற்றும் பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் காசா, உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் கடந்தாண்டு அக்டோபரில் தாக்குதலை துவக்கியது.

காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛‛ஹமாஸ்” அமைப்பு இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக போரை நடத்தி வருகிறது. கடந்த 10 மாதங்களாக இந்த போர் நடைபெற்று வருகிறது.

நேற்று ( ஆக.,21) இஸ்ரேல் இராணுவம் காசா மீது திடீரென நடத்திய வான் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் கடந்த 10 மாதங்களில் இஸ்ரேல் – காசா இடையேயான போரில் இதுவரை 40 ஆயிரத்து 225 பேர் பலியானதாகவும், 92 ஆயிரத்து 981 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...