காசாவில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும்: பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி கூட்டாக அறிக்கை!

Date:

பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ள நிலையில், போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கூட்டாக அறிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் கூட்டாக இந்த அறிக்கையை விடுத்துள்ளனர்.
இதில், “சண்டை முடிவுக்கு வர வேண்டும். ஹமாஸால் பிடித்து வைத்திருக்கும் அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்க வேண்டும். காசா மக்களுக்கு அவசர உதவி தேவை. அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தொடக்க காலங்களில், போர் நிறுத்தம் தொடர்பாக ஐநாவில் தீர்மானங்கள் கொண்டுவரப்படும்போது அதற்கு எதிராக இந்த நாடுகள் வாக்களித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

போரில் இதுவரை 40,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டிணியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.

Popular

More like this
Related

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...