காத்தான்குடி அஷ்ஷெய்க் சிபான் பலாஹி அவர்களுக்கு ஹதீஸ் துறையில் கலாநிதி பட்டம்!

Date:

கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட அஷ்ஷெய்க் எம்.எப்.ஷிபான் பலாஹி அவர்கள் எகிப்தில் உள்ள அல்-அஸ்கர் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கலாநிதி கற்கையை பூர்த்தி செய்வதற்காக சமர்ப்பித்த ஆய்வின் அடிப்படையில் அவருக்காக நடத்தப்பட்ட வாய்மொழி பரீட்சையில் அதிவிசேட சித்தியைப் பெற்று கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்துள்ளார்.

அல் அஸ்கர் பல்கலைக்கழகத்தின் மூத்த அறிஞரான கலாநிதி உமர் ஹாசீம் அவர்களின் மேற்பார்வையில் இந்த கலாநிதி கற்கைக்கான வாய்மொழி பரீட்சை நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.

ஏற்கனவே காத்தான்குடியை சேர்ந்த பேராசிரியர் அஷ்ரப் அவர்கள் அதேதுறையில் கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளார் என்பதுடன் அவர் தற்போது சவூதி அரேபியாவின் பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியாக கடமையாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...