‘குடு திகா..’:தொலைக்காட்சி நேர்காணலில் கைகலப்பில் ஈடுபட்ட தமிழ் எம்.பிக்கள்

Date:

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மோதிக் கொண்டுள்ளனர்.

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோர் இவ்வாறு நிகழ்ச்சியின் இடை நடுவில் மோதிக் கொண்டுள்ளனர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கக் கூடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

எனினும், தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், கட்சியின் தீர்மானத்தை மீறி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு  ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள் உள்ளக மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஒருவர் மாற்றி ஒருவர் பொது வெளிகளில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை துரோகி என பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

இந்தநிலையில், இவர்கள் இருவரும் குறித்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி  விவாதத்தின் போது திகாம்பரம் எம்.பி, வேலுகுமார் எம்.பியை பார் குமார் என்று திட்டினார்.

பதிலுக்கு வேலுகுமார் எம்.பி, குடு திகா என்று திட்டினார். இதனால் இருவருக்கு வாக்குவாதம் முற்றியது. பங்குபற்றிய போது வாக்குவாதம் தீவிரமடைந்து அது மோதலில் முடிவடைந்துள்ளது.

 

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...