சகலருக்கும் வெற்றி: ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்

Date:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலையொட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஓய்வூதிய நன்மைகளைப் பாதுகாத்தல் 2016-2019 காலப்பகுதிக்குள் ஓய்வூதியதாரர்களுக்கு இல்லாது போன ஓய்வூதியத்தை மறுசீரமைத்து, ஓய்வூதிய முரண்பாட்டுக்கு நிலையான தீர்வை வழங்குவேன் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஓய்வூதியம் பெற்ற சமூகத்திற்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில் அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கைப் பொறுப்பு நிதி முகாமைத்துவத்தை வலுப்படுத்த 1999 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தை திருந்துவேன்.

தேசிய பாதுகாப்பிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களின் கௌரவத்தைப் பாதுகாத்து அவர்களின் நலனை உறுதி செய்ய 6 மாதங்களுக்குள் இராணுவ அலுவல்கள் திணைக்களம் நிறுவப்படும்.

தற்போது இராணுவ நலனுக்கு பொறுப்பாக உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்த துறையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும். இது புனர்வாழ்வு, சுகாதாரம், தொழிற்கல்வி, ஆலோசனை மற்றும் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சேவைகளை வழங்குதல். ஓய்வு பெற்ற போர் வீரர்களுக்கு ‘One Rank-One Pension கொள்கையை ஏற்றுக்கொள்ளுதல்.

போர் வீரர்களின் பிரச்சினைகளைக் கேட்டு தீர்க்க சிறப்பு ஓம்புஸ்மன் ஒருவரை நியமித்தல், மற்றும் அந்த ஒம்புஸ்மன் அதிகாரியிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகளை 6 மாதங்களுக்குள் செயல்படுத்துதல்.

வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குதல் நீண்டகால நிலைத்தன்மைக்காக, இலங்கையின் ஓய்வூதிய முறையை முற்றிலும் மறுசீரமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி சஜித்பிரேமதாசவின் முழுமையான தேர்தல் விஞ்ஞாபன அறிவிப்பு கீழே..

https://images.assettype.com/oruvan/2024-08-29/rn8xeyer/Samata_Jayak_Sajith_manifesto_Tamil___2_.pdf

 

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...