ஜனாதிபதிக்கு சிலிண்டர் சின்னம்

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் தேர்தல் திணைக்களத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15ஆம் திகதி) இடம்பெற்றது.

இன்று காலை 9 மணிமுதல் 11 மணிவரை வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலமாகவும் 9 மணிமுதல் 11.30 வரை ஆட்சேபனைகளை தெரிவிக்கும் காலமாகவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அதன் பிரகாரம் 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். என்றாலும், 39 வேட்பாளர்கள் மாத்திரமே வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் அனைவரதும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் 3 ஆட்சேபனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. என்றாலும், தேர்தல் சட்டத்தின் 14, 15 பிரிவுகளின் கீழ் குறித்த 3 ஆட்சேபனைகளும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

இதேவேளை தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் போட்டியிடும் சின்னம் சங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

O/L பரீட்சாத்திகளுக்கென இன்றும் இயங்கும் ஆட்பதிவு திணைக்களம்

17ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள  மாணவர்களில்  இதுவரை...

‘புதிய கல்வி சீர்திருத்தங்கள் தேவையானதே’ என்பதனை அழகிய முறையில் தெளிவுபடுத்திய புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் ஒன்றுகூடல்!

தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தேசிய அளவில்...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

நாட்டில் இன்று மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்...

மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் : செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...