ஜனாதிபதிக்கு சிலிண்டர் சின்னம்

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் தேர்தல் திணைக்களத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15ஆம் திகதி) இடம்பெற்றது.

இன்று காலை 9 மணிமுதல் 11 மணிவரை வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலமாகவும் 9 மணிமுதல் 11.30 வரை ஆட்சேபனைகளை தெரிவிக்கும் காலமாகவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அதன் பிரகாரம் 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். என்றாலும், 39 வேட்பாளர்கள் மாத்திரமே வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் அனைவரதும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் 3 ஆட்சேபனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. என்றாலும், தேர்தல் சட்டத்தின் 14, 15 பிரிவுகளின் கீழ் குறித்த 3 ஆட்சேபனைகளும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

இதேவேளை தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் போட்டியிடும் சின்னம் சங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...