தேர்தல் செயன்முறைகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும்: தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

Date:

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணி (EU EOM) ஒன்பது மாகாணங்களிலும் 26 கண்காணிப்பாளர்களை (LTOs) நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஒவ்வொரு மாகாணத்திற்கும் சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தலைமை கண்காணிப்பாளரும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருமான நாச்சோ சான்செஸ் அமோர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கண்காணிப்பாளர்கள் தங்கள் கண்களாகவும் காதுகளாகவும் இருக்கப் போகிறார்கள் என்றும் அவர்கள் தேர்தல் செயன்முறையின் ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாக அவதானிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் சட்ட நடைமுறை, நிதி, ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள், பாதுகாப்பு மற்றும் நடமாட்டம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய 10 நிபுணர்களைக் கொண்ட முக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகத்தை நகரங்களில் மட்டுமல்லாது, சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் கண்காணிப்பாளர்கள் சந்திப்பார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...