நடை பயணம் மேற்கொண்டு சாதனை படைத்த இளைஞனுக்கு ஜனாதிபதி பாராட்டு

Date:

நடை பவனியாக  இலங்கையை  சுற்றி வந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த ஷஹ்மி ஷஹீத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பாராட்டு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

45 நாட்களில் சுமார் 1500 கிலோ மீற்றர் தூரத்தை நடை பவனியாக சென்று நிறைவு செய்து அவர் சாதனை படைத்துள்ளார்.

இது இலங்கை பிரஜை ஒருவரால் மேற்கொள்ளப்படும் முதலாவது சாதனை முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜுலை மாதம் 13 ஆம் திகதி பேருவளையில் ஆரம்பித்த ஷஹ்மி, இந்த நடைபவனியை காலி வீதியூடாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, வெல்லவாய, மொனராகலை, கிழக்கிலங்கையின் பொத்துவில், அம்பாறை, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, கல்முனை, திருகோணமலை, வவுனியா, முல்லைதீவு, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறையை தொடர்ந்து நடை பவனியாகவே பயணித்து மீண்டும் பேருவளையை வந்தடைந்து சாதனை படைத்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...