இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தின் தளம்பல் தன்மை காரணமாக, நாடு முழுவதும் தற்போது பெய்து வரும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (14) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழைவீழ்சச்சி எதிர்பார்க்கப்படுகின்றது