பர்கினோ பசோவில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 200 பேர் உயிரிழப்பு

Date:

மேற்கு ஆபிரிக்க நாடான பர்கினோ பசோவில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 200 பேர் உயிரிழப்பு.

பர்கினோ பசோவில், கடந்த செப்டெம்பர் மாதம் இராணும் ஆட்சியைக் கைப்பற்றியது. அதேவேளை அந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புக்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த தீவிரவாத குழுக்கள் பாதுகாப்ப படையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

அத் தீவிரவாத குழுக்களை அழிப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கு உதவியாக அரசுக்கு ஆதரவான குழுக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை பர்கினோ பசோவின் பர்சலொகொ மாகாணம் கயன் நகருக்குள் புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இத் தாக்குதலில் 200 பேர் உயிரிழந்துள்ளதோடு 140 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இத் தாக்குதல் சம்பவத்துக்கு அல்கொய்தாக தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...