பிரித்தானியாவில் வெடித்துள்ள வன்முறை: பயண எச்சரிக்கை விடுத்துள்ள நாடுகள்!

Date:

பிரித்தானியாவின் பல பகுதிகளில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து பிரித்தானியாவுக்குச் செல்லவேண்டாம் என்று சில நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பிரித்தானியாவிலிருக்கும் தங்கள் நாட்டவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரித்தானியாவிலுள்ள தங்களது நாட்டவர்களுக்கு சில நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

முதலாவது பயண எச்சரிக்கை விடுத்த நாடாக மலேசியா  லண்டனிலிருக்கும் உயர் ஸ்தானிகர் மூலம், மலேசிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், பிரித்தானியாவுக்குச் செல்லும் மற்றும் பிரித்தானியாவிலிருக்கும் மலேசிய நாட்டவர்கள், போராட்டங்கள் நடக்கும் இடங்களிலிருந்து விலகியிருக்குமாறும், கவனமாக இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து, கனடாவும் , அவுஸ்திரேலியாவும் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேலும், சுவிட்சர்லாந்து பயண எச்சரிக்கை விடுக்காமல், தங்கள் குடிமக்கள் போராட்டங்கள் நடைபெறும் இடத்துக்குச் செல்லவேண்டாம் என்றும் வன்முறை வெடிக்கக் கூடும் என்றும், போக்குவரத்துக்கு இடையூறும் தாமதமும் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...