புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றியதால் மு. கா.உயர்பீட கூட்டத்திலிருந்து பிரதிப் பொருளாலர் யஹியாகான் வெளியேற்றம்!

Date:

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டத்திலிருந்து கட்சியின் பிரதிப் பொருளாலரான ஏ.சி.யஹியாகான் வெளியேற்றப்பட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று கட்சியின் தலைமையமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது.

இதன்போது , லுஹர் தொழுகைக்கான அதான் ஒலித்த வேளையில், கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில்,  யஹியாகான் எடுத்திருந்த படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்தார்.

விஷமிகளுக்கு கட்சியை அநாகரிகமாக முகநூலில் விமர்சிக்க இடமளித்தமையால் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அவரை கூட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார் .

கட்சியில் யஹியாகானுடைய வகிபாகம் பற்றி பாராட்டியதோடு , இந்த முடிவை மனவருத்தோடு எடுக்கவேண்டிய நேர்ந்தது பற்றியும் தலைவர் தெரிவித்தார்.

தலைவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டு,  அவருடன் கைகுலுக்கி , முன்மாதிரியான முறையில் யஹியாகான் அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...