புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றியதால் மு. கா.உயர்பீட கூட்டத்திலிருந்து பிரதிப் பொருளாலர் யஹியாகான் வெளியேற்றம்!

Date:

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டத்திலிருந்து கட்சியின் பிரதிப் பொருளாலரான ஏ.சி.யஹியாகான் வெளியேற்றப்பட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று கட்சியின் தலைமையமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது.

இதன்போது , லுஹர் தொழுகைக்கான அதான் ஒலித்த வேளையில், கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில்,  யஹியாகான் எடுத்திருந்த படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்தார்.

விஷமிகளுக்கு கட்சியை அநாகரிகமாக முகநூலில் விமர்சிக்க இடமளித்தமையால் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அவரை கூட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார் .

கட்சியில் யஹியாகானுடைய வகிபாகம் பற்றி பாராட்டியதோடு , இந்த முடிவை மனவருத்தோடு எடுக்கவேண்டிய நேர்ந்தது பற்றியும் தலைவர் தெரிவித்தார்.

தலைவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டு,  அவருடன் கைகுலுக்கி , முன்மாதிரியான முறையில் யஹியாகான் அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...