மதத்தின் மீது மக்களுக்கிருக்கும் பக்தியை எமக்கெதிராக திருப்ப நினைக்கிறார்கள்: உலமா சபை சந்திப்பின் பின் அனுர

Date:

நாங்கள் பதவிக்கு வந்தால் கண்டி பெரஹர உள்ளிட்ட பெரஹராக்களை நிறுத்தப் போவதாக சிங்கள சமூகத்தில் பிரச்சாரம் நடக்கிறது. மதத்தின் மீது மக்களுக்கு இருக்கும் பக்தியை எமக்கெதிராகத் திருப்ப நினைக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார கூறினார்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமையகத்தில் இன்று (21) உலமா சபைத் தலைவருடன் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதும் இந்தச் சந்திப்பின் நோக்கம் எனக் குறிப்பிட்ட அவர் நாட்டின் அரசியலைப் பற்றியும் ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் விளக்கமளித்ததாகவும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்ஷைக் அர்கம் நூரமித் மற்றும் கலாநிதி ஏ.ஏ.அஹமட் அஸ்வர் ஆகியோர் உட்பட உயர் பீட அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத்தும் இந்தச் சந்திப்பில் இணைந்திருந்தார்.

இந்த சந்திப்பின்போது சிங்கள மொழியிலான திருக்குர்ஆன் மொழிப்பெயர்ப்பின் பிரதியொன்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவரால் அனுரகுமார திசாநாயக்கவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...