வாக்குச்சீட்டிலிருந்து மறைந்தது ”யானை” சின்னம்: குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளியா?

Date:

இலங்கையில் இது வரையில் இடம்பெற்றுள்ள சில ஜனாதிபதித் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரியச் சின்னமான யானைச் சின்னம் வாக்காளர் சீட்டில் காணப்படவில்லை.

அதற்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேக்காவின் அன்னச்சின்னத்திற்கு  ஆதரவு வழங்கியிருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கியிருந்த அதே கட்சியின் பிரதித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தது.

சஜித் பிரேமதாச அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்த போதிலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேறு ஒருவரின் கட்சியையும் சின்னத்தையும் தேர்ந்தெடுத்திருந்தார்.

இந்த வருடமும் ஜனாதிபதித் தேர்தல் வாக்குச் சீட்டில் ஐ.தே.கவின் யானை தென்படாது. எனினும், ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் பேரின் விருப்பத்தைப் பெற்றிருந்த பொதுஜன பெரமுன தற்போது முற்றாகச் சிதைவடைந்துள்ளமை இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் மற்றுமொரு விசேட அம்சமாகும்.

இன்று, பொதுஜன பெரமுனவின் பலமான உறுப்பினர்கள் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதால், பொதுஜன பெரமுன தோற்றுப் போய்விட்டதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, நாமல் ராஜபக்ச என்ற ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாரிசின் எதிர்கால அரசியல் இருப்பு குறித்து இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முடிவெடுக்க முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், பொதுஜன பெரமுன எனும் ஜனரஞ்சக அரசியலின் எதிர்காலமும் இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கப்படும் என்பதும் பலரது கருத்தாக உள்ளது. அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கதிரைச் சின்னமும் மறைந்து விட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...