வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய தகவல்!

Date:

இலங்கையில் வருடாந்தம் நடத்தப்படும் வாகன புகை பரிசோதனையில் 20 வீதமான வாகனங்கள் தோல்வியடைவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பரிசோதனை செய்யும் வாகனங்கள் தரமானதாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வாகன புகைப்பரிசோதனை சான்றிதழை பெற்றுக்கொள்வதோடு, வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி போன்றவற்றையும் ஒரே இடத்தில் வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் இரண்டு மாதங்களுக்குள் இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...