ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் உடனடியாக தரையிறக்கப்பட்ட விமானம்

Date:

மும்பையில்(mumbai) இருந்து இன்று (22) காலை வந்த ஏர் இந்தியா(air india) விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

காலை 8 மணியளவில் 135 பயணிகளுடன் விமானம் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை 8.44 மணியளவில் விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை நெருங்கியதும் காலை 7.30 மணியளவில் விமானிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, காலை 7.36 மணிக்கு விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. “இந்த சம்பவத்தால் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. விமான நிலைய செயற்பாடுகள் தற்போது தடையின்றி உள்ளன,” என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular

More like this
Related

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வருகை: பாராளுமன்றத்தில் விசேட உரை

வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின்...

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன அவரது வீட்டில் சடலமாக மீட்பு.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை!

நாட்டின் தற்போதைய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்...

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...