2024 ஜனாதிபதித் தேர்தல்: 157 முறைப்பாடுகள் பதிவு

Date:

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 20 சட்ட மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையத்திற்கு இது போன்ற 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சட்ட மீறல்கள் தொடர்பான எஞ்சிய முறைப்பாடுகள் 9 மாவட்ட தேர்தல் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி தொடக்கம் இதுவரையிலான காலப்பகுதியில் 157 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்தன்று ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவில் முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு திட்டம் குறித்து இங்கு ஆலோசிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...