2024 ஜனாதிபதி தேர்தல்: கருத்துக் கணிப்புகளின் படி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலை

Date:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டிஜிட்டல் தளம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஜூலை மாதம் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவு அறிக்கை இன்று (01) வெளியிடப்பட்டுள்ளது.

முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 79 வீத ஆதரவுடன் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு அடுத்தபடியாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 14 வீத மக்கள் ஆதரவையும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஐந்து வீத மக்கள் ஆதரவையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் 50,087 ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றனர். அவர்களில் 87 வீதம் பேர் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுளு்ளது.

ஓகஸ்ட் மாதத்திற்கான இந்த கருத்துக்கணிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதுடன், https://hela.page.link/vimasuma என்ற இணைப்பின் மூலம் இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...