2024 ஜனாதிபதி தேர்தல்;நாளாந்தம் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Date:

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பதிவான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (30) வரை 1,482 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவற்றில் வன்முறைச் சம்பவங்கள் குறித்து 07 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டத்தினை மீறியமை தொடர்பில் 1419 முறைப்பாடுகளும், 56 வேறு முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

குறித்த முறைப்பாடுகளில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 612 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 870 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...