அலி ஸாஹிரின் மு.கா. உறுப்புரிமையை நீக்குவதற்கு எதிராக தடையுத்தரவு

Date:

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம்.பியாக அண்மையில் பெயரிடப்பட்ட அலி ஸாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானம் எடுத்துள்ள நிலையில், அதற்கு எதிராக செயற்பட்டமை தொடர்பில் அவரது கட்சி உறுப்புரிமையை பறிக்க கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதனைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்குமாறு தெரிவித்து அவர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இன்று (28) கொழும்பு மாவட்ட நீதவான் சந்துன் விதான முன்னிலையில் குறித்த மனு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தடையுத்தரவை பிறப்பிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் ஆகியோருக்கு எதிராகவே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீண்டும் எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் அன்றையதினம் வரை இந்த தடையுத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கடந்த ஓகஸ்ட் 04ஆம் திகதி கூடி தீர்மானித்தது.
ஆயினும் தான் கட்சியின் குறித்த உயர்பீடக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் முறைப்பாட்டாளரான அலி சாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பதாகக் குற்றம் சுமத்தி, எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் இன்றி தமது கட்சி உறுப்புரிமையைப் பறிக்கும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செயற்படுவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் முடிவுகளுக்கு மாற்றமாக நடந்து கொண்டதாக தெரிவித்து எம்.பி. பதவியை இழந்த நசீர் அஹமட்டின் இடத்திற்கே அலி ஸாஹிர் மௌலானா எம்.பியாக தெரிவாகியிருந்தார்.
அத்துடன் அண்மையில் ஐ.ம.ச. கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயற்பட்டதாக, மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெனாண்டோ ஆகியோர் தமது எம்.பி. பதவிகளை இழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...