‘இதுவே கடைசி வாய்ப்பு’: போர் நிறுத்தத்துக்கு சம்மதித்த இஸ்ரேல்; ஹமாஸ் சொல்வது என்ன?

Date:

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி  நெதன்யாகுவை சந்தித்த பின்னர் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கடந்த 10மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.  இந்த தாக்குதலில் இதுவரை 40 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த போருக்கு பின்னர் பல மக்கள் அகதிகள் முகாம்களை போன்று கூடாரங்கள் அமைத்து தங்கிவருகின்றனர். போருக்கு பின்பான பிரச்னைகளை பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

புதுவகையான தோல் நோயால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் கூடாரங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்துவதாக பலஸ்தீன மக்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.

இதனிடையே மார்ச் மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் ஏப்ரல் தொடக்கத்திலேயே முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் நிகழ்த்தி வருகிறது.  வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இதனிடையே காசாவில் போர்நிறுத்தம் கொண்டுவர கடந்த வாரம் கத்தாரில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால் உடன்பாடு எட்டப்படாமல் அந்த பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிவுற்றது. இந்நிலையில் போர்நிறுத்தம் தொடர்பாக மீண்டும் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காசாவில் நடைபெறும் போர் மத்திய கிழக்குப் பகுதிகளின் பிற பகுதிகளுக்கும் விரிவடையும் பேராபத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தத்தை மேற்கொள்ளும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது.

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான தருணம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நெருக்கத்தில் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் 9-ஆவது முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில், அந்நாட்டின் அதிபர் ஐசாக் ஹர்ஸோக் உடன் அவர் பேச்சுவர்த்தையில் ஈடுபட்டார். அப்போது, காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட இதுவே கடைசி வாய்ப்பு என்ற எச்சரிக்கையை இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் அமெரிக்க தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி பிளிங்கன் தெரிவித்ததாவது,

‘காஸாவில் போர்நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பது ஆகிய அமெரிக்க முன்மொழிவுகளை இஸ்ரேல் ஆதரிப்பதாக நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேபோல் ஹமாஸ் அமைப்பினரும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டு பணயக் கைதிகளை திருப்பி அனுப்புவதன் மூலம், பலஸ்தீனியர்களின் 10 மாத துன்பங்களை முடிவுக்கு கொண்டுவர முடியும்” என பிளிங்கன் தெரிவித்துள்ளார். . இதையடுத்து எகிப்து நாட்டிற்கு ஆண்டனி பிளிங்கன்  இன்று செல்கிறார்.

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...