‘இயலும் ஶ்ரீ லங்கா’: ரணிலுக்கு ஆதரவளிக்கும் 34 கட்சிகள் ஒப்பந்தம் கைச்சாத்து

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் வகையில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் இணைந்து ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

‘இயலும் ஶ்ரீ லங்கா’ புரிந்துணர்வு ஒப்பந்தம் என அழைக்கப்படும் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திடும் மாநாடு இன்று (16) கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.

ஜனாதிபதி மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து முற்பகல் 10.06 மணி எனும் சுப நேரத்தில் அதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இம்மாநாட்டில் கையெழுத்திட்ட 34 அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு மட்டுமல்லாது, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கவுமாகுமென, ‘இயலும் ஶ்ரீ லங்கா’ மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...