உக்கிரமடையும் மத்தியக் கிழக்கு: ஈரானிய பாதுகாப்பு கவுன்சில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

Date:

நேற்றும் நேற்று முன்தினமும் ஈரானில் பலியான இஸ்மாயில் ஹனியே,  மற்றும்  ஹிஸ்புல்லா தளபதி படுகொலையைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியம் மிகவும் பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரானிய பாதுகாப்பு கவுன்சில் அவசர அவசரமாகக் கூடி பின்வரும் விடயங்கள் குறித்து தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

01. டெல்அவிவ் மற்றும் ஹைஃபா உள்ளடக்கிய பகுதிகளில் இஸ்ரேலுடைய பாதுகாப்பு தளங்களை தாக்குதல்.
02. ஈரான், யேமன் ,சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நேச நாடுகள் இணைந்து தாக்குதல்களை மேற்கொண்டு அதிகூடிய தாக்கத்தை ஏற்படுத்துதல்.
03. யுத்தம் விரிவடையும் பட்சத்தில் தற்பாதுகாப்புக்கும் தாக்குதலுக்குமான திட்டங்களை விதித்தல்.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தின் போது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

(மூலம்: நியூயோர்க் டைம்ஸ்)

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...